சொல்வன்மை

திருக்குறள்:
 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை  
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

மு.வ உரை:
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது
சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும்
முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன்,
சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர்
என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.

ADVERTISEMENTS
Translation:
Mighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach.

ADVERTISEMENTS
Explanation:
It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.