இடுக்கணழியாமை

திருக்குறள்:
 இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

மு.வ உரை:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
நாம்
அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள்
மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல்
மிக்கது வேறொன்றும் இல்லை.

ADVERTISEMENTS
Translation:
Smile, with patient, hopeful heart, in troublous hour;
Meet and so vanquish grief; nothing hath equal power.

ADVERTISEMENTS
Explanation:
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.