ஒற்றாடல்

திருக்குறள்:
 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 
வல்லறிதல் வேந்தன் தொழில்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நண்பர்,
பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா
நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து
கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

மு.வ உரை:
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர்,
நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும்,
எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

ADVERTISEMENTS
Translation:
Each day, of every subject every deed,
'Tis duty of the king to learn with speed.

ADVERTISEMENTS
Explanation:
It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.