செங்கோன்மை

திருக்குறள்:
 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட 
பெயலும் விளையுளும் தொக்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நீதி
வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல்
பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

மு.வ உரை:
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

ADVERTISEMENTS
Translation:
Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.

ADVERTISEMENTS
Explanation:
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.