பொச்சாவாமை

திருக்குறள்:
 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை 
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

மு.வ உரை:
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை:
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

ADVERTISEMENTS
Translation:
Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!.

ADVERTISEMENTS
Explanation:
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.