தெரிந்துசெயல்வகை

திருக்குறள்:
 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு 
கொள்ளாத கொள்ளாது உலகு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

மு.வ உரை:
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

ADVERTISEMENTS
Translation:
Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.

ADVERTISEMENTS
Explanation:
Let
a man reflect, and do things which bring no reproach; the world will
not approve, with him, of things which do not become of his position to
adopt.