தெரிந்துசெயல்வகை

திருக்குறள்:
 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று 
போற்றினும் பொத்துப் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

மு.வ உரை:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

ADVERTISEMENTS
Translation:
On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.

ADVERTISEMENTS
Explanation:
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.