குற்றங்கடிதல்

திருக்குறள்:
 செயற்பால செய்யா திவறியான் செல்வம் 
உயற்பால தன்றிக் கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.

மு.வ உரை:
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா உரை:
செல்வத்தால்
தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால்
செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து
போகும்.

ADVERTISEMENTS
Translation:
Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.

ADVERTISEMENTS
Explanation:
The
wealth of the avaricious man, who does not expend it for the purposes
for which he ought to expend it will waste away and not continue.