குற்றங்கடிதல்

திருக்குறள்:
 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
முன்கூட்டியே
எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய
வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

மு.வ உரை:
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

ADVERTISEMENTS
Translation:
His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.

ADVERTISEMENTS
Explanation:
The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.