கல்லாமை
திருக்குறள்:
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
ADVERTISEMENTS
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர்
உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர்,
ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
ADVERTISEMENTS
'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!.
ADVERTISEMENTS
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.