அறன்வலியுறுத்தல்
திருக்குறள்:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
ADVERTISEMENTS
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
மு.வ உரை:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
ADVERTISEMENTS
ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற்
பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. (
'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது.
பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும்
நியமிக்கப்பட்டன.).
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது
பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின்
அறாதென்றற்கு இது கூறினார்.
Translation:
'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.
ADVERTISEMENTS
That is virtue which each ought to do, and that is vice which each should shun.