ஊழ்

திருக்குறள்:
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் 
நல்லவாம் செல்வம் செயற்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய்
முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக
முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

மு.வ உரை:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம்,
தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம்
உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம்
உண்டாகும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம்
தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே
யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை'
யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது
அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும்
அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால
முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

மணக்குடவர் உரை:
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு
தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு
நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

Translation:
All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.

ADVERTISEMENTS
Explanation:
Let In the
acquisition of property, every thing favourable becomes unfavourable,
and (on the other hand) everything unfavourable becomes favourable,
(through the power of fate).