அவாவறுத்தல்

திருக்குறள்:
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் 
அற்றாக அற்றது இலர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

மு.வ உரை:
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை:
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று
சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக
அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில
துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது
சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.

Translation:
Men freed from bonds of strong desire are free;
None other share such perfect liberty.

ADVERTISEMENTS
Explanation:
They are said
to be free (from future birth) who are freed from desire; all others
(who, whatever else they may be free from, are not freed from desire)
are not thus free.