துறவு

திருக்குறள்:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் 
பற்றி விடாஅ தவர்க்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

மு.வ உரை:
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும்
இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள்
இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது
வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது
கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.

Translation:
Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp.

ADVERTISEMENTS
Explanation:
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.