இன்னாசெய்யாமை

திருக்குறள்:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
உய்யா விழுமந் தரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு
செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக்
கூடியதாகும்.

மு.வ உரை:
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு
செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத
துன்பத்தையே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத்
தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை
அது நமக்குத் தரும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு
ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத்
துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க
முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும்
பாவமும் எய்துதல்.).

மணக்குடவர் உரை:
தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச்
செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது
காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத்
தவிரவேண்டுமென்றது.

Translation:
Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.

ADVERTISEMENTS
Explanation:
In an ascetic
inflict suffering even on those who hate him, when he has not done them
any evil, it will afterwards give him irretrievable sorrow.