தவம்

திருக்குறள்:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை 
அஃதிலார் மேற்கொள் வது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை
வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது
வீண் செயலேயாகும்.

மு.வ உரை:
தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில்
தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை
மேற்கொள்வதும் வீண்தான்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும்
உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் -
ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்.
(பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம்
உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு
போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை:
தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்;
அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத்
தவம் வாராது வரினுந் தப்புமென்றது.

Translation:
To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence.

ADVERTISEMENTS
Explanation:
Austerities
can only be borne, and their benefits enjoyed, by those who have
practised them (in a former birth); it will be useless for those who
have not done so, to attempt to practise them (now).