புலான்மறுத்தல்

திருக்குறள்:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

மு.வ உரை:
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய
குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் -
ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல்.
பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.).

மணக்குடவர் உரை:
குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்;
உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத்
தெளிவுடையாருண்ணாரென்றது.

Translation:
Whose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave.

ADVERTISEMENTS
Explanation:
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.