ஈகை

திருக்குறள்:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
இன்முகங் காணும் அளவு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை
பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு
துன்பமாகவே தோன்றும்.

மு.வ உரை:
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப்படுதலும்
இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது
பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்; (எச்ச உம்மையும் முற்று
உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று
இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை'
(நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும்
ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு மெனின்,
இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும். இது
கொடுக்குங்கால் தாழாது கொடுக்க வேண்டுமென்றது.

Translation:
The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.

ADVERTISEMENTS
Explanation:
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.