ஈகை

திருக்குறள்:
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 
இல்லெனினும் ஈதலே நன்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது
பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று
சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து
வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

மு.வ உரை:
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப்
பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது
என்றாலும் கொடுப்பதே நல்லது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல
நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று -
ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று.
('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது.
பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது
கூறுவார் தீயதும் உடன் கூறினார்.).

மணக்குடவர் உரை:
ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல்
தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ
ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால்
யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.

Translation:
Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.

ADVERTISEMENTS
Explanation:
To beg is
evil, even though it were said that it is a good path (to heaven). To
give is good, even though it were said that those who do so cannot
obtain heaven.