தீவினையச்சம்

திருக்குறள்:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால்,
அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து
வருத்திக்கொண்டே இருக்கும்.

மு.வ உரை:
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்;
ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை
அழிக்கும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை
உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் -
அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்
('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை
நீங்காமைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை:
எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய
பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின்
கூறப்படும்.

Translation:
From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.

ADVERTISEMENTS
Explanation:
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.