தீவினையச்சம்

திருக்குறள்:
தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

மு.வ உரை:
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள்,
நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய
அஞ்ச வேண்டும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச்
செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை
தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும்
அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர்
உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும்
அஞ்சப்படுவதாயிற்று.).

மணக்குடவர் உரை:
தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.

Translation:
Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.

ADVERTISEMENTS
Explanation:
Because evil produces evil, therefore should evil be feared more than fire.