பயனில சொல்லாமை

திருக்குறள்:
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

மு.வ உரை:
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத
சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் -
மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும்,
பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள்
பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின்
குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல்,
விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது பயனில சொல்லல்
இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.

Translation:
Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity!.

ADVERTISEMENTS
Explanation:
Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.