பயனில சொல்லாமை

திருக்குறள்:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
நீர்மை யுடையார் சொலின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

மு.வ உரை:
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை
இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது
விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை:
நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.).

மணக்குடவர் உரை:
பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு
உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா
நன்மையும் போமென்றது.

Translation:
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.

ADVERTISEMENTS
Explanation:
If the good speak vain words their eminence and excellence will leave them.