புறங்கூறாமை
திருக்குறள்:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
ADVERTISEMENTS
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
மு.வ உரை:
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
ADVERTISEMENTS
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான்
ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன்
என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச்
காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல்
கொள்ளப்படாது என்பதாம்.).
மணக்குடவர் உரை:
ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப்
புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும். இஃது இதனைச் சொல்லுவார்
அறமறியா ரென்றது.
Translation:
The slanderous meanness that an absent friend defames,
'This man in words owns virtue, not in heart,' proclaims.
ADVERTISEMENTS
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.