புறங்கூறாமை
திருக்குறள்:
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
ADVERTISEMENTS
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத
ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
மு.வ உரை:
எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச்
சொல்லக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல்
பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல்
அவனைப் பற்றிப் பேச வேண்டா.
ADVERTISEMENTS
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று
கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க -
அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று
பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும்
அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத
சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய
சொற் கூறலும் ஆகாதென்றது.
Translation:
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.
ADVERTISEMENTS
Though you
speak without kindness before another's face speak not in his absence
words which regard not the evil subsequently resulting from it.