புறங்கூறாமை

திருக்குறள்:
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத
ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

மு.வ உரை:
எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச்
சொல்லக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல்
பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல்
அவனைப் பற்றிப் பேச வேண்டா.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று
கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க -
அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று
பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும்
அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத
சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய
சொற் கூறலும் ஆகாதென்றது.

Translation:
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.

ADVERTISEMENTS
Explanation:
Though you
speak without kindness before another's face speak not in his absence
words which regard not the evil subsequently resulting from it.