புறங்கூறாமை
திருக்குறள்:
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
ADVERTISEMENTS
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து
வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி
வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
மு.வ உரை:
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும்
கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது
வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.
ADVERTISEMENTS
[அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை.
மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காறாமை
வெஃகாமைகளின்பின் வைக்கப்பட்டது.)
ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும்
செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப்
புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை
அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால்
அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ்
செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்,
இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.
Translation:
Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there's good within him still.
ADVERTISEMENTS
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite".