புறங்கூறாமை

திருக்குறள்:
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் 
புறங்கூறான் என்றல் இனிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து
வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி
வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

மு.வ உரை:
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

சாலமன் பாப்பையா உரை:
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும்
கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது
வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை.
மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காறாமை
வெஃகாமைகளின்பின் வைக்கப்பட்டது.)

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும்
செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப்
புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை
அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால்
அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ்
செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்,
இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

Translation:
Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there's good within him still.

ADVERTISEMENTS
Explanation:
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite".