வெஃகாமை
திருக்குறள்:
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
ADVERTISEMENTS
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன்
தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால்
கெட்டொழிய நேரிடும்.
மு.வ உரை:
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.
ADVERTISEMENTS
அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை
விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத
சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக்
கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின்,
அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல்.
'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே
பெறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.
Translation:
Though, grace desiring, he in virtue's way stand strong,
He's lost who wealth desires, and ponders deeds of wrong.
ADVERTISEMENTS
If he, who
through desire of the virtue of kindness abides in the domestic state
i.e., the path in which it may be obtained, covet (the property of
others) and think of evil methods (to obtain it), he will perish.