பொறையுடைமை

திருக்குறள்:
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
மறத்தல் அதனினும் நன்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

மு.வ உரை:
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க
வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட
நல்லது.

சாலமன் பாப்பையா உரை:
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க;
அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட
நல்லது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம்
ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல்
அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும்
நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும்
உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்).

மணக்குடவர் உரை:
பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.

Translation:
Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;.

ADVERTISEMENTS
Explanation:
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.