பொறையுடைமை

திருக்குறள்:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை
இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த
பண்பாகும்.

மு.வ உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி
தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப்
பொறுப்பது முதன்மை அறம்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு
மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல்.
நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல்
விழையாமையின் பின் வைக்கப்பட்டது.)

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல;
தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய
அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).

மணக்குடவர் உரை:
தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை
யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை;
அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.

Translation:
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.

ADVERTISEMENTS
Explanation:
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.