குறிப்பறிவுறுத்தல்

திருக்குறள்:
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் 
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின்
குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத்
தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

மு.வ உரை:
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:
நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய
மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து
ஒன்றும் உண்டு.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய
வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை
மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என்
மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு.
கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது.
உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம்
பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ
அது செய்தல் வேண்டும்' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு
துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து. தோழி மெலிதாகச் சொல்லிக்
குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட
தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.

Translation:
The secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked.

ADVERTISEMENTS
Explanation:
The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.