உறுப்புநலனழிதல்

திருக்குறள்:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் 
கொடியர் எனக்கூறல் நொந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும்
காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து
போகிறேன்.

மு.வ உரை:
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை:
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள்
சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள்
கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக்
கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா
நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர்
வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச்
சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.

Translation:
grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.

ADVERTISEMENTS
Explanation:
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.