கண்விதுப்பழிதல்

திருக்குறள்:
 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து 
வேண்டி அவர்க்கண்ட கண்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அன்று,
இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள
அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும்
துன்பப்படுங்கள்.

மு.வ உரை:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

சாலமன் பாப்பையா உரை:
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.

ADVERTISEMENTS
Translation:
Aching, aching, let those exhaust their stream,
That melting, melting, that day gazed on him.

ADVERTISEMENTS
Explanation:
The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.