படர்மெலிந்திரங்கல்
திருக்குறள்:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
ADVERTISEMENTS
நள்ளிரவிலும்
என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும்
வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.
மு.வ உரை:
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.
ADVERTISEMENTS
I swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, 'mid the waters, only I!.
ADVERTISEMENTS
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.