அலரறிவுறுத்தல்

திருக்குறள்:
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் 
தவ்வென்னும் தன்மை இழந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.

மு.வ உரை:
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது) காமம் கவ்வையால் கவ்விது - என் காமம்
இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை
இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும்.
(அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக்
கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்'
என்பது குறிப்பு மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத்
தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும் அது.).

மணக்குடவர் உரை:
அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வலரில்லை யாயின்
தனது தன்மை யிழந்து பொலிவழியும். செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக்
கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.

Translation:
The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.

ADVERTISEMENTS
Explanation:
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.