குறிப்பறிதல்

திருக்குறள்:
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற
கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு
கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

மு.வ உரை:
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும்,
பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும்
அடையாளங்கள்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன்
இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே
புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு
- நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. (குறிப்பு:
ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான்,
இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.).

மணக்குடவர் உரை:
செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும்,
அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும். இஃது அன்பின்மை
தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.

Translation:
The slighting words that anger feign, while eyes their love reveal.
Are signs of those that love, but would their love conceal.

ADVERTISEMENTS
Explanation:
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.