கயமை

திருக்குறள்:
 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் 
நெஞ்சத்து அவலம் இலர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எப்போதும்
நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்
பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!.

மு.வ உரை:
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

சாலமன் பாப்பையா உரை:
நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.

ADVERTISEMENTS
Translation:
Than those of grateful heart the base must luckier be,
Their minds from every anxious thought are free!.

ADVERTISEMENTS
Explanation:
The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).