செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்:
உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச்
சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு
மதிப்பிடப்படும்.

மு.வ உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது,
அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற
நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும்
பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று;
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம்
அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு
பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும்
மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம்
என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும்
மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர்
செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.

Translation:
The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.

ADVERTISEMENTS
Explanation:
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.