செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள்:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

மு.வ உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில்
சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப்
பெரியதாகும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த
எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது -
தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும்
மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம்.
'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.).

மணக்குடவர் உரை:
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி
தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற்
செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

Translation:
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.

ADVERTISEMENTS
Explanation:
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.