பண்புடைமை

திருக்குறள்:
 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 
பண்புடைமை என்னும் வழக்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அன்புடையவராக
இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக
இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

மு.வ உரை:
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லாரிடமும்
அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில்
பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

ADVERTISEMENTS
Translation:
Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.

ADVERTISEMENTS
Explanation:
Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.