சான்றாண்மை

திருக்குறள்:
 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 
ஆழி எனப்படு வார்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தமக்குரிய
கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்
புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத்
திகழ்வார்கள்.

மு.வ உரை:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

ADVERTISEMENTS
Translation:
Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.

ADVERTISEMENTS
Explanation:
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.