பெருமை
திருக்குறள்:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
ADVERTISEMENTS
தன்னிலை
தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால்,
கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக்
கிடைக்கும்.
மு.வ உரை:
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்
கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப்
போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு
வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
ADVERTISEMENTS
Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.
ADVERTISEMENTS
Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.