மானம்
திருக்குறள்:
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
ADVERTISEMENTS
சாகாமலே
இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான
மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக்
குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.
மு.வ உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.
சாலமன் பாப்பையா உரை:
குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?.
ADVERTISEMENTS
When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?.
ADVERTISEMENTS
For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.