குடிமை

திருக்குறள்:
 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் 
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
விளைந்த
பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து
கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில்
பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மு.வ உரை:
இன்ன
நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற்
பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

ADVERTISEMENTS
Translation:
Of soil the plants that spring thereout will show the worth:
The words they speak declare the men of noble birth.

ADVERTISEMENTS
Explanation:
As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).