குடிமை

திருக்குறள்:
 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் 
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
முகமலர்ச்சி,
ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும்
உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.

மு.வ உரை:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல
குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல்,
இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.

ADVERTISEMENTS
Translation:
The smile, the gift, the pleasant word, unfailing courtesy
These are the signs, they say, of true nobility.

ADVERTISEMENTS
Explanation:
A
cheerful countenance, liberality, pleasant words, and an unreviling
disposition, these four are said to be the proper qualities of the truly
high-born.