கள்ளுண்ணாமை

திருக்குறள்:
 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் 
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒரு
குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது
மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க
மாட்டானா?.

மு.வ உரை:
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப்
பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும்
இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.

ADVERTISEMENTS
Translation:
When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?.

ADVERTISEMENTS
Explanation:
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.