கள்ளுண்ணாமை
திருக்குறள்:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
ADVERTISEMENTS
மது
அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது
மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.
மு.வ உரை:
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன்
சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது
பெரிதாக வெளிப்பட்டு விடும்.
ADVERTISEMENTS
No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.
ADVERTISEMENTS
Let
(the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment
(he drinks) he will simply betray his former attempt to conceal.