பெண்வழிச்சேறல்

திருக்குறள்:
 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் 
வினையாண்மை வீறெய்த லின்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.

மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

ADVERTISEMENTS
Translation:
No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.

ADVERTISEMENTS
Explanation:
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.