பெரியாரைப் பிழையாமை

திருக்குறள்:
 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து 
வேந்தனும் வேந்து கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

மு.வ உரை:
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

ADVERTISEMENTS
Translation:
When blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame.

ADVERTISEMENTS
Explanation:
If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.