பெரியாரைப் பிழையாமை

திருக்குறள்:
 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் 
தகைமாண்ட தக்கார் செறின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பெருஞ்செல்வம்
குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும்,
தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப்
போகும்.

மு.வ உரை:
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

சாலமன் பாப்பையா உரை:
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?.

ADVERTISEMENTS
Translation:
Though every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown?.

ADVERTISEMENTS
Explanation:
If
a king incurs the wrath of the righteous great, what will become of his
government with its splendid auxiliaries and (all) its untold wealth ?.