உட்பகை
திருக்குறள்:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
ADVERTISEMENTS
இனிமையாகத்
தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை
தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின்
உட்பகையும் ஆகும்.
மு.வ உரை:
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால்
தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால்
தீயனவே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு
துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப்
பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந்
துன்பமே.
ADVERTISEMENTS
Water and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane.
ADVERTISEMENTS
Shade
and water are not pleasant, (if) they cause disease; so are the
qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.